தாயை பிரிந்த யானைக்குட்டியை குழந்தையை போல் பாதுகாக்கும் வனவிலங்கு காப்பாளர்
By: Nagaraj Sun, 30 Aug 2020 12:35:11 PM
கென்யாவில் தன் தாயை பிரிந்து தவித்த யானைக்குட்டியை தன் குழந்தை போல் பார்த்துக் கொள்கிறார் வனவிலங்கு காப்பாளர் ஒருவர்.
இன்று மனிதனை மனிதன் நேசிப்பதே கடினமாக தான் காணப்படுகிறது. ஒரு மனிதன் கண்ணீர் விடுவதை களிப்போடு பார்த்து செல்லும் மனிதர்கள் வாழும் உலகில், விலங்குகளை தனது பிள்ளையை போல நேசிக்கும் மனிதர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.
இந்நிலையில், கென்யாவில் யானைக்குட்டி ஒன்று தன் தாயிடம் இருந்து பிரிந்து,
வழிதவறி சென்றுள்ளது. தன் தாயை காணாமல் தவித்துவந்த அந்த குட்டி யானை,
வனவிலங்கு காப்பாளர் ஒருவர் கண்ணில் பட்டுள்ளது. இந்த யானையை அவர் எடுத்து
தனது பிள்ளையை போல பார்த்துக் கொள்கிறார்.
இரவில் அந்த குட்டி யானை
தூங்கும் போது அதற்கு போர்வை போர்த்தி, அதன் அருகிலேயே படுத்துக்க
கொள்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.