Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூருவில் வைரசை தடுக்க 3 மந்திரிகள் நியமனம் செய்தது கொரோனாவை தடுக்கவா? - சித்தராமையா கேள்வி

பெங்களூருவில் வைரசை தடுக்க 3 மந்திரிகள் நியமனம் செய்தது கொரோனாவை தடுக்கவா? - சித்தராமையா கேள்வி

By: Karunakaran Mon, 06 July 2020 1:30:22 PM

பெங்களூருவில் வைரசை தடுக்க 3 மந்திரிகள் நியமனம் செய்தது கொரோனாவை தடுக்கவா? - சித்தராமையா கேள்வி

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது அதிகமாகி கொண்டே செல்கிறது. இந்நிலையில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில், பெங்களூருவில் சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால், கொரோனா நோயாளி இறந்தார். இதற்காக மாநகராட்சி கமிஷனர் அனில்குமார் இறந்தவரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட மனிதநேய செயலை நான் பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக முதல்-மந்திரியை பிரதமர் பாராட்டியுள்ளார். தினமும் பத்திரிக்கைகளில் கொரோனா தடுப்பில் ஏற்பட்டுள்ள தோல்விகள் குறித்து காட்டியிருந்தால் இன்னும் சிறப்பான முறையில் பாராட்டி இருப்பார் என்று கூறியுள்ளார்.

coronavirus,siddaramaiah,bengalore,ministers ,கொரோனா வைரஸ், சித்தராமையா, பெங்களூர், அமைச்சர்கள்


பெங்களூருவில் கொரோனாவை தடுக்க 3 மந்திரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நியமனம் செய்திருப்பது, கொரோனாவை தடுக்கவா? அல்லது கருத்து வேறுபாடுகளை சரிசெய்யவா?. இந்த மூன்று மந்திரிகள் அதில் எந்த வேலையை செய்ய உள்ளனர் என சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தடுப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளேன். அதற்கு ஆதாரங்களை வெளியிடட்டும் என சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு சவால் விட்டுள்ளார். உங்களின் சகோதரர்கள் இதே போல் சவால் விட்டு இறுதியில் சிறைக்கு சென்றது உங்களின் கவனத்தில் இருக்கட்டும் என்று சித்தராமையா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags :