Advertisement

கொரோனாவுடன் 2 ஆண்டுகள் வாழ வேண்டியிருக்கும்

By: Nagaraj Sat, 07 Nov 2020 1:56:09 PM

கொரோனாவுடன் 2 ஆண்டுகள் வாழ வேண்டியிருக்கும்

சுகாதார அமைச்சு செயலாளர் தகவல்... கொரோனா வைரசுடன் மேலும் இரண்டு வருடங்களுக்கு வாழ வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் இதற்கு வாழப்பழகிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டாவது கொரோனா அலைக்கு தீர்வை காணாவிட்டால், மூன்றாவது அலை உருவாகலாமென விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை ஜனவரியில் உருவாகலாம் அது இன்னமும் ஆபத்தானதாகக் காணப்படலாம் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|