ராகுல் காந்தி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்பாரா?
By: vaithegi Sat, 03 Dec 2022 6:40:54 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்பாரா? ... ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமைப் பயணம் என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கிட்டதட்ட மூன்று மாதங்களாகவே அவரது யாத்திரை நடைபெற்று கொண்டு வருகிறது.
இதனை அடுத்து தற்போது மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை சென்று கொண்டிருக்கிறது. இதற்கு இடையே, நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வரும் 7 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையடுத்து பாரத் ஜோடோ யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி இந்த யாத்திரையில் பங்கேற்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் பிற மூத்த எம்.பிக்களான ஜெய்ராம் ரமேஷ், திக் விஜய் சிங் உள்ளிட்ட கூட்டத்தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.