Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் வழங்கப்படுமா ?

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் வழங்கப்படுமா ?

By: vaithegi Tue, 13 Dec 2022 7:48:19 PM

பொங்கலுக்கு  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணம் வழங்கப்படுமா ?

சென்னை: தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு இலவச பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கி கொண்டு வருகிறது.இதனை தூது வரவிருக்கும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் அரசு பரிசுத்தொகுப்பை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த பல தகவல்கள் வெளியான வகையில் உள்ளது. ஆனால் இதுவரை அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. தற்போதைய தகவலின் படி 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூபாய் 1000 ரொக்க பணத்தையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

pongal,cash money ,பொங்கல் ,ரொக்க பணம்

இதையடுத்து 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மக்கள் ரொக்க பணத்தை அதிகம் எதிர்பார்த்தனர் ஆனால் அரசு ரொக்க பணம் ஏதும் வழங்கவில்லை.

ஆனால் நடப்பாண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனால் ரொக்க பணத்தை அரசு வங்கி கணக்கில் வர வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அவர்கள் வெளியிடுவார்.

Tags :
|