Advertisement

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

By: Monisha Sat, 09 July 2022 7:12:23 PM

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா?

தமிழ்நாடு: தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதை அடுத்து, பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

corona,school,closed,students ,கொரோனா,பள்ளி,அபராதம்,மூடல்,

கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு, அதாவது, சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் உயர்ந்து வருவது பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சில தனியார் பள்ளிகள், கொரோனா காலத்தில் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தியது போல், மீண்டும் நடத்தலாமா என்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது. இது குறித்து விரைவில் கருத்துக்களை தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, கொரோனா நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்ட செல்லும் பட்சத்தில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகளை நடத்துவது குறித்தும் தனியார் பள்ளிகள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags :
|
|
|