Advertisement

பள்ளிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கபடுமா?

By: vaithegi Wed, 11 Jan 2023 7:00:59 PM

பள்ளிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கபடுமா?

சென்னை: வெள்ளிக்கிழமை விடுமுறையா ..... தமிழகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையானது வருகிற 15- ம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புவார்கள்.

இதனால் பொது போக்குவரத்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே இதை தவிர்ப்பதற்கு சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.அந்த வகையில் ஜனவரி 12ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

holidays,students ,விடுமுறை ,மாணவர்கள்

மேலும் இம்முறை ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பண்டிகை வந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதியும், ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் பள்ளிகளுக்கு (வெள்ளிக்கிழமை ) விடுமுறை அளிக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து இத்தகவல்களை அரசு அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவித்தால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு கூட்ட நெரிசலின்றி செல்வார்கள். மேலும் இம்முறை பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளதால் மாணவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :