Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

9 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

By: Monisha Tue, 22 Sept 2020 12:04:25 PM

9 முதல் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு இருந்தாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடைபெறுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் நகர்புறங்களில் நடைமுறைக்கு வந்தாலும் கிராமப் பகுதிகளில் இன்னும் முழுமையாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவது இல்லை. பல மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பாடங்கள் புரியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளிக்கூடங்கள் திறந்தால்தான் மாணவர்களுக்கு பாடங்கள் புரியும் என்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களின் விருப்பத்துடன் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளை தொடங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி வழங்கியது.

corona virus,schools,students,online class,counseling ,கொரோனா வைரஸ்,பள்ளிகள்,மாணவர்கள்,ஆன்லைன் வகுப்பு,ஆலோசனை

இதன்படி ஆந்திரா, பீகார், மேற்கு வங்காளம், அசாம், கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறப்பதற்கு தனியார் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருந்தால் 20 பேர்களை ஒரு வகுப்பிலும், மற்ற 20 மாணவர்களை இன்னொரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அரசு பள்ளிக்கூடங்களிலும் இதேபோல் நடைமுறையை பின்பற்றலாம் என்றும் கூறி வருகின்றனர். இதன்மூலம் மாணவர்களின் மனஅழுத்தம் குறையும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இந்த மாதம் 30-ந்தேதி வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என்றும் அக்டோபர் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி இப்போதே வகுப்பறையில் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

Tags :