Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஊரடங்கு நீட்டிப்பா?...மருத்துவ குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை

ஊரடங்கு நீட்டிப்பா?...மருத்துவ குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை

By: Monisha Sat, 29 Aug 2020 09:16:48 AM

ஊரடங்கு நீட்டிப்பா?...மருத்துவ குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை

ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழு மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

curfew,medical team,collector,consulting,corona virus ,ஊரடங்கு,மருத்துவ குழு,கலெக்டர்,ஆலோசனை,கொரோனா வைரஸ்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் இ-பாஸ் முறை தொடர்வது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|