Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா ?

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா ?

By: vaithegi Fri, 27 Jan 2023 8:12:46 PM

மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுமா ?

சென்னை: நீடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் ... தமிழகத்தில் மின் கட்டணம் பற்றி முறைகேடுகள் நடைபெறுவதால் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும் பல சிறப்பு முகாம்கள் மூலமாக இப்பணி வேகமாக நடைபெற்றது. கடந்த நவம்பர் மாதம் 15 -ம் தேதி முதல் இது பற்றி பணிகள் தொடங்கப்பட்டது.

இதையடுத்து முதற்கட்டமாக இப்பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இன்னும் சிலர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கவில்லை என்பதால் ஜனவரி 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

duration,electricity connection , கால அவகாசம் , மின் இணைப்பு


மேலும் பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்புடன் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது. இதுவரை 2 கோடியே 11 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில் இன்னும் 50 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர். அதனால் மேலும் சில நாட்கள் கால அவகாசம் நீடிக்க வாய்ப்புள்ளதாக வெளியாகி இருக்கிறது. இது பற்றி அறிவிப்பை அமைச்சர் 30-ம் தேதி வெளியிடுவார் என்றும், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்பது தவறான செய்தி என மின் வாரிய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :