Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் திங்கட்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா

வரும் திங்கட்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா

By: vaithegi Sat, 01 July 2023 11:06:55 AM

வரும் திங்கட்கிழமை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா

சென்னை: திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா? .... மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நகரின் ஒரு சில பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணத்தினால் மாணவர்களால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாக பெற்றோர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பக்ரீத் விடுமுறை முடிவடைந்து ஒரு சில பள்ளிகளில் இன்றும் பள்ளிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

holiday,heavy rain ,விடுமுறை ,கனமழை


எனவே, மாணவர்கள் திங்கட்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பலத்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே, மாணவர்களுக்கு காலம் தாழ்த்தி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது பாடங்களை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திங்கட்கிழமை பள்ளிகளுக்கு கனமழையின் காரணமாக விடுமுறை அறிவிக்கப்படுமா என்பது பற்றிய அறிவிப்பு சில மணி நேரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :