Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நாளை மின் விநியோகம் தடை இருக்குமா? இல்லையா .. அறிவிப்பை எதிர்நோக்கி பயனர்கள்

தமிழகத்தில் நாளை மின் விநியோகம் தடை இருக்குமா? இல்லையா .. அறிவிப்பை எதிர்நோக்கி பயனர்கள்

By: vaithegi Fri, 31 Mar 2023 1:42:01 PM

தமிழகத்தில் நாளை மின் விநியோகம் தடை இருக்குமா? இல்லையா .. அறிவிப்பை எதிர்நோக்கி பயனர்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதம் ஒரு முறை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இத்தகைய பணிகளின் போது மின் விநியோகம் தடையும் செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து நடப்பு மாதம் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் பெரும்பாலான பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி மின் விநியோகம் தடை செய்யப்படவில்லை. நேற்று ஓரிரு இடங்களில் மட்டுமே பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.

users,power supply interruption ,பயனர்கள்,மின் விநியோகம் தடை

இந்த மின் விநியோகம் தடை குறித்து மின் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதத்தின் தொடக்க நாளான நாளை மின் விநியோகம் தடை பகுதிகள் குறித்த எந்த அறிவிப்புகளும் இதுவரை வெளியாகவில்லை.

இனிமேல் வெளியாகுமா? நாளை துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுமா அதனால் மின் விநியோகம் தடை செய்யப்படுமா? இல்லையா என்ற எதிர்பார்ப்பு மின் பயனர்களுக்கு எழுந்துள்ளது. இந்த மின்தடை குறித்த முன் அறிவிப்பினால் மின் நுகர்வோர்கள் திட்டமிட்டு சில பணிகளை முதல் நாளே முடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|