- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு அதிகமானோர் பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 500க்கு அதிகமானோர் பாதிப்பு
By: vaithegi Tue, 18 Apr 2023 1:29:12 PM
சென்னை: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் வேகமாக பரவி கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அதன் படி அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் அணிவது கட்டாயம் ஆகும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது வரை 3,195 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.
எனவே அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், அது போல நிலைமை தமிழகத்திற்கு ஏற்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.