Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிராக்டரை முந்தி செல்ல முற்பட்டபோது பரிதாபம்; டயரில் சிக்கி பெண் பலி

டிராக்டரை முந்தி செல்ல முற்பட்டபோது பரிதாபம்; டயரில் சிக்கி பெண் பலி

By: Monisha Sat, 08 Aug 2020 3:24:27 PM

டிராக்டரை முந்தி செல்ல முற்பட்டபோது பரிதாபம்; டயரில் சிக்கி பெண் பலி

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் டிராக்டரை முந்தி செல்ல முற்பட்டபோது டயரில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து ராஜா (வயது 40). இவர் தனது மனைவி பிரேமலதா (34), மகள் சுபத்ரா (10) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் கோவில்பட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றார்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்தி செல்ல முற்பட்டபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.

tractor,motorcycle,accident,woman,killed ,டிராக்டர்,மோட்டார்சைக்கிள்,விபத்து,பெண்,பலி

இதில் பிரேமலதாவின் மீது டிராக்டரின் டயர் ஏறியதால் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவருக்கு தளவாய்புரம் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் ராஜபாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவர் கணேசமூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :
|