Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பெண்

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பெண்

By: Karunakaran Thu, 10 Dec 2020 10:01:33 AM

9 மாத சிகிச்சைக்கு பின்னர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த பெண்

அமெரிக்காவின் தெற்கு புளோரிடா மாகாணத்தின் மையாமி நகரில் உள்ள ஜாக்சன் மெமோரியல் மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றிவந்த ரோசா பிலிப்புக்கு கடந்த மார்ச் 9-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தான் பணிபுரிந்துவந்த அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ஆஸ்துமா ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால், கொரோனா சிகிச்சை அளிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு சென்றதை தொடர்ந்து அவரது உடலில் ரத்த அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கொரோனாவின் தீவிரத்தால் அவருக்கு நுரையீரல் செயலிழந்ததையடுத்து டையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. இத்தனை சிகிச்சை முறை மற்றும் கொரோனாவால் ரோசாவின் கை விரல்கள் கருமை நிறத்திற்கு மாறிவிட்டது. மேலும், அவரின் கால்களின் செயல்பாடுகள் பெருமளவு முடங்கியது. படுக்கையில் இருந்து எழ முயற்சி செய்யும்போதெல்லாம் அவரது ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்துள்ளது.

woman,corona infection,9 months,treatment ,பெண், கொரோனா தொற்று, 9 மாதங்கள், சிகிச்சை

ஒரு கட்டத்தில் கொரோனாவின் உச்சபட்ட பாதிப்பால் அவதிப்பட்ட ரோசா இனி உயிர்பிழைக்கமாட்டார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் நினைத்துள்ளனர். ஆனாலும், முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். அவர் 2 மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவர்களின் விடா முயற்சியாலும், ரோசாவின் தன்னம்பிக்கையாலும் அவர் 9 மாதகால சிகிச்சைக்கு பின் நேற்று கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

9 மாதங்களுக்கு பின்னர் கொரோவில் இருந்து நேற்று குணமடைந்த ரோசா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தனது வீட்டிற்கு செல்ல மருத்துவமனையை விட்டு வெளியே வந்த ரோசா பேட்டி அளித்தபோது, கொரோனா உண்மையானது. அதன் பாதிப்புகளும் உண்மையானவை. ஆனால், இங்கு பெற்ற அன்பு அதைவிட மிகவும் உண்மையானது, நான் உணர்ச்சிகளை கடக்க முயற்சிக்கிறேன். ஏனென்றால் உயிர்பிழைப்பேன் என்று நினைக்கவில்லை. நான் இனி கைவிட்டுவிட நினைக்கமாட்டேன். நான் இனி மேலும் மேம்படப்போகிறேன் என்று கூறினார்.


Tags :
|