பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை துரத்தி, துரத்தி வெளுத்தெடுத்த பெண்கள்
By: Nagaraj Tue, 08 Sept 2020 3:47:05 PM
பொறுத்தது போதும் என்று பெண்கள் பொங்கி எழுந்து பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை வெளுத்தெடுத்தனர்.
நாகப்பட்டினத்தில் சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயம் விற்ற கும்பலை கிராமத்து பெண்கள் விறகு கட்டையால் அடித்து வெளுத்தெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்காலில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பாக்கெட் சாராயங்களை கடத்தி வந்து நாகப்பட்டினம் மாவட்ட எல்லை கிராமங்களில் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் கீழ்வேளூர் ஆனைமங்கலம் பகுதியில் இளைஞர்கள் சிலர் முறைகேடாக
பாக்கெட் சாராயத்தை காரைக்காலில் இருந்து கடத்தி விற்று வருவது அந்த
பகுதியில் உள்ள கிராமத்தினருக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக விறகு
கட்டைகளோடு விரைந்த அந்த கிராமத்து பெண்கள் சாராயம் விற்ற இளைஞர்களை
துரத்தி, துரத்தி அடித்து விரட்டியுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சாராயம் விற்ற நான்கு பேரை கைது
செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. கொரோனாவால் வேலை
இல்லாமல் உள்ள சில இளைஞர்கள் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக
கூறப்படுகிறது.