Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரி முதல் மாத துவக்கத்திலேயே மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம்

ஜனவரி முதல் மாத துவக்கத்திலேயே மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம்

By: Nagaraj Sun, 19 Nov 2023 12:31:45 PM

ஜனவரி முதல் மாத துவக்கத்திலேயே மகளிர் உரிமை தொகை வழங்கப்படலாம்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்ட பணம் அடுத்த ஆண்டு முதல் குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் தகுதி உள்ள 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி அனைத்து குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலும் ரூ.1000 செலுத்த திட்டமிட்ட நிலையில் இம்மாதம் தீபாவளியையொட்டி முன்கூட்டியே வழங்கப்பட்டது. இந்த ரூ.1000 உரிமைத்தொகை குடும்ப தலைவிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

head of family,interest ,குடும்ப தலைவி,உரிமைத்தொகை, மாதந்தோறும், பயன்

இதனை, மேலும் பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டின் துவக்கத்திலிருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத துவக்கத்தில் ரூ.1000 வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மாத துவக்கத்திலேயே குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கினால் அந்த மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க உபயோகமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :