உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராகிறார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
By: Nagaraj Wed, 20 May 2020 10:37:51 AM
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக பதவி வகித்து வருபவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோகி நகாடானி. இந்த குழுவில் 34 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வரும் 22-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் உலக சுகாதார அமைப்பின் 2 நாள் மாநாடு நடக்க உள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக இந்தியாவை சேர்ந்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இவர் வரும் 22-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.