இலங்கையில் கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல்
By: Nagaraj Sat, 12 Sept 2020 10:02:54 AM
உலக சுகாதார அமைப்பு தகவல்...உலகளவிய ரீதியில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இலங்கையில் அதனை கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக சாத்தியமாகி உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, மேலும் ஒரு கட்டமாக நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பினால் புதிய அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. தங்கள் உறுப்பு நாடுகள் வைரஸ் தொடர்பிலான
பிரதிபலிப்பு குறித்து உலகிற்கு தெரியப்படுத்துவதே இந்த அறிக்கையின்
நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த அறிக்கையில் 75 முதல் 88 வரையான பக்கங்களில் இலங்கை தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.