உலகம் முழுவதும் நேற்று 2.47 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு
By: Nagaraj Mon, 05 Oct 2020 2:40:04 PM
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 87 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் பேர் பெருந்தொற்றினால் உயிரிழந்ததால்
இதுவரை மரணித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா உள்பட பெரும்பாலான நாடுகளில் கடந்த இரு தினங்களை விட
நேற்று இறப்பு விகிதம் குறைவாகக் காணப்பட்டது.
2 கோடியே 66 லட்சம்
பேர் இதுவரை பெருந்தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 77 லட்சத்து 36
ஆயிரம் பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.