உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Sun, 23 Aug 2020 4:21:51 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 59 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்தியா, அமெரிக்கா, பிரேசிலில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 7 ஆயிரத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 66 லட்சத்து 62 ஆயிரத்து 226 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 61 ஆயிரத்து 798 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 1 கோடியே 55 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இருப்பினும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 7 ஆயிரத்து 689 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, இந்தியா அடுத்தடுத்து உள்ளன.