உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கியது
By: Karunakaran Thu, 23 July 2020 10:02:44 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் 1 கோடியே 53 லட்சத்து 64 ஆயிரத்து 925 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புடைய 53 லட்சத்து 91 ஆயிரத்து 736 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறனர். இவர்களில் 66 ஆயிரத்து 174 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 29 ஆயிரத்து 339 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உலகம் முழுவதும் 93 லட்சத்து 43 ஆயிரத்து 736 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.