உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்தது
By: Karunakaran Wed, 17 June 2020 11:41:52 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் தோன்றியது. தற்போது, உலகம் முழுவதும் 213 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்தை கடந்துள்ளது. பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82 லட்சத்து 27 ஆயிரத்து 744 ஆக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 லட்சத்து 3 ஆயிரத்து 529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 42 லட்சத்து 79 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இருப்பினும் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 44 ஆயிரத்து 437 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் மற்றும் ரஷ்யா நாடுகள் உள்ளன.