உலகம் முழுவதும் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்தது
By: Karunakaran Sat, 22 Aug 2020 1:49:36 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை கடந்துள்ளது.
உலகம் முழுவதும் 2 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 649 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடைய 66 லட்சத்து 5 ஆயிரத்து 513 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 61 ஆயிரத்து 849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து 1 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இருப்பினும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 8 லட்சத்து 2 ஆயிரத்து 318 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்கா,
பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகள் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளன.