உலகம் முழுவதிலும் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.55 கோடியாக அதிகரிப்பு
By: Karunakaran Fri, 21 Aug 2020 5:46:01 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவுயுள்ளது. உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால், நாளுக்கு நாள் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது, உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.55 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.96 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்துவர்கள் பட்டியலில் பிரேசில், இந்தியா போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.