விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த மல்யுத்த வீரர் காளி
By: Nagaraj Thu, 03 Dec 2020 08:48:00 AM
தலைநகர் டில்லியில் முகாமிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல மல்யுத்த வீரர் தி கிரேட் காளி.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் 7 நாட்களாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டு போராடி வருகின்றனர்.
பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ட்ராக்டர்கள் மூலம் டெல்லிக்குள் நுழைந்து அங்கேயே தங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் எல்லையில் தங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த
விவசாயிகளும் டெல்லி போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர். மத்திய அமைச்சருடன்
நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் போராட்டம் நீடிக்கிறது.
அதேநேரத்தில்
விவசாயிகளின் இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து
வருகின்றனர். இந்நிலையில் பிரபல மல்யுத்த வீரரான 'தி கிரேட் காளி'
விவசாயிகள் போராட்டத்திற்கு சென்று நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக
தனது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஜெய் ஜவான் ஜெய் கிஷான்' என
பதிவிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.