கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக மாறிய வுகான் நகரம்
By: Karunakaran Sat, 06 June 2020 1:47:57 PM
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவி்ன் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் தான் தோன்றியது. இந்நிலையில் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகளுக்கு அடுத்தடுத்து நடத்தப்பட்ட 2 பரிசோதனைகளில் தொற்று இல்லை என தெரிய வந்தது.
மேலும், அவர்களது உடல் வெப்பநிலை இயல்பு நிலையை அடைந்து, கொரோனா அறிகுறிகள் மறைந்தன. அதன்பின் நேற்று அவர்கள் மூவரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனால் தற்போது, வுகான் நகரில் மட்டுமின்றி, ஹுபெய் மாகாணத்தில் கூட கொரோனா நோயாளிகள் எவரும் இல்லை. வுகான் நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.
இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத நகரமாக வுகான் நகரம் மாறியது. இந்நிலையில், வுகான் நகரில் வசிக்கும் ஒரு கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை கொரோனா அறிகுறிகளுடன் 5 பேருக்கும், அறிகுறி இல்லாமல் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.