மீண்டும் அரசியல் களத்தில் யஷ்வந்த் சின்ஷா; புதிய கட்சி தொடங்க உள்ளதாக அறிவிப்பு
By: Nagaraj Mon, 29 June 2020 10:24:40 AM
புதிய கட்சி தொடங்குகிறார்... கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அரசியலிலிருந்தும், பா.ஜ.,விலிருந்தும் விலகுவதாக அறிவித்த யஷ்வந்த் சின்ஹா, புது கட்சி துவங்கி பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
பா.ஜ.,வில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சருமான, யஷ்வந்த் சின்ஹா, கட்சிக்கு எதிராக போர்க் கொடி துாக்கினார். பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை கடந்த தேர்தலில் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால், ஓரங்கட்டப்பட்டதால் 2018 ஏப்., மாதம் கட்சியிலிருந்து விலகினார்.
அதனால் கட்சிக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் தொடர்ந்து
விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இந்நிலையில் இந்தாண்டு ஆண்டு
இறுதியில் நடக்கவிருக்கும் பீஹார் சட்டசபை தேர்தலில் புதுக்கட்சி துவங்கி
போட்டியிடப் போவதாக யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் கூறியதாவது: நிதிஷ் தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சியால் பீஹார்
மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தற்போதைய மோசமான நிலையை பார்த்து மீண்டும்
அரசியலுக்கு வர நான் முடிவு எடுத்துள்ளேன். விரைவில் கட்சி துவங்கி பெயர்
அறிவிப்பேன். பீஹாரை முன்னேற்ற எனது கட்சி கடுமையாக உழைக்கும். இவ்வாறு
அவர் தெரிவித்துள்ளார்.