Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: vaithegi Mon, 11 July 2022 07:36:13 AM

தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 537 பேர் கொரோனாவால்  பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று சற்று மெதுவாக குறைந்து வருகிறது. அதன்படி நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நேற்று புதிதாக 33 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஆண்கள் 1,418 பேரும், பெண்கள் 1,119 பேரும் என 2 ஆயிரத்து 537 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 804 பேர், செங்கல்பட்டில் 434 பேர், திருவள்ளூரில் 151 பேர், கோவையில் 119 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

corona,vaccine ,கொரோனா, தடுப்பூசி

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் பாதிப்பு இல்லை. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 119 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 418 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 2,560 பேர் 'டிஸ்சார்ஜ்' தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 28 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். மேலும் நேற்றைய நிலவரப்படி 18 ஆயிரத்து 819 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 6 ஆயிரத்து 989 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 959 பேரும், திருவள்ளூரில் 1,073 பேரும், கோவையில் 910 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 858 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 560 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 44 ஆயிரத்து 682 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Tags :
|