Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்

நாட்டில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்

By: vaithegi Wed, 29 Mar 2023 11:26:18 AM

நாட்டில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்

இந்தியா: நாட்டில் நேற்றும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்றே குறைந்தது. இதனை அடுத்து நேற்று முன்தினம் 1,805 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று மட்டும் 1,573 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியானது.

இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 7 ஆயிரத்து 525 ஆனது.கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து நேற்று ஒரு நாளில் 888 பேர் மீண்டனர்.

மேலும் இதுவரை இந்த தொற்றின் பிடியில் இருந்து மீண்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 703 ஆக அதிகரித்தது.

corona,india ,கொரோனா,இந்தியா

இதையடுத்து தொற்றினால் நேற்று நாட்டில் எங்கும் உயிர்ப்பலி இல்லை. எனினும் கேரளாவில் விடுபட்ட கொரோனா இறப்புகளில் 4-ஐக் கணக்கில் சேர்த்தனர். இதனால் தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 841 ஆக அதிகரித்தது.

தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 681 உயர்ந்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 981 ஆகும்.

Tags :
|