Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நெருப்புடன் விளையாடுகிறீர்கள்... பஞ்சாப் ஆளுநருக்கு கோர்ட் கண்டனம்

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்... பஞ்சாப் ஆளுநருக்கு கோர்ட் கண்டனம்

By: Nagaraj Sat, 11 Nov 2023 09:22:01 AM

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்... பஞ்சாப் ஆளுநருக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி: பஞ்சாப் ஆளுநருக்கு கோர்ட் கண்டனம்... மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெருப்புடன் விளையாடுவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து பஞ்சாப் அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவைக் கிடப்பில்போடுவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்.

bills,governor,question,democracy,court,condemnation ,மசோதாக்கள், ஆளுநர், கேள்வி, ஜனநாயகம், கோர்ட், கண்டனம்

ஒரு ஆளுநரால் எப்படி இவ்வாறு செய்ய முடியும்? பஞ்சாபில் நடப்பது வருத்தமளிக்கும் செயலாக உள்ளது. நாடாளுமன்றத்தில் கடைபிடிக்கப்படும் ஜனநாயகத்தை நாம் தொடர்கிறோமா? எனக் கேள்வி எழுப்பியது.

பஞ்சாப் அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி வாதாடினார். அப்போது பேசிய அவர், அரசியலமைப்பிற்கு முரணான தன்மையை ஆளுநர் கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டினார். கல்வி உள்ளிட்ட 7 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

Tags :
|
|