Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 10 ,11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் .. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

10 ,11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் .. அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

By: vaithegi Tue, 23 May 2023 1:41:31 PM

10 ,11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் ..  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 19-ம் தேதி அன்று பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இத்தேர்வினை மொத்தமாக 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதினர். இதில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சியடைந்தனர். மொத்தமாக 78 ஆயிரத்து 706 பேர் தோல்வியடைந்தனர்.

இதனை அடுத்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்ட தேர்வுத்துறை, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் எனவும் இதற்கு மே 23-ம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறியிருந்தது.

directorate of government examinations,sub-exam ,அரசு தேர்வுகள் இயக்ககம், துணைத் தேர்வு

இந்த நிலையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 27-ம் தேதி கடைசி நாள் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஜூன் 27-ம் தேதி மொழித்தாளும் , 28-ம் தேதி ஆங்கில பாடமும் , ஜூன் 30-ம் தேதி கணித பாடமும், ஜூலை 1-ம் தேதி விருப்பம் மொழி தாளும், ஜூலை 3-ம் தேதி அறிவியல் பாடத்திற்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதேபோல் ஜூன் 4-ம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கு தேர்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளின் வாயிலாகவும் , தனித் தேர்வுகள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகள் சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம்.10-ம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூபாய் 500 , 11ஆம் வகுப்புக்கு சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Tags :