Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Thu, 11 May 2023 3:31:07 PM

இன்று முதல் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்


சென்னை: மாணவர்கள் இன்று முதல் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் .... தமிழகத்தில் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், 12 -ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஜூன் 19-ம் தேதி முதல் 26 -ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்விற்கு வராத மாணவர்கள் துணைத்தேர்வு எழுதுவதற்கு இன்று முதல் வரும் மே 17-ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.

supplementary examination,students ,துணைத் தேர்வு,மாணவர்கள்


மேலும், துணை தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களும் இந்தாண்டு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துணை தேர்வுக்கு மாணவர்கள் மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 18 முதல் 20- ம் தேதி வரை ரூ.1000 கட்டணமாக செலுத்தி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்கள் தேர்வு கட்டணமாக ரூ.185 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூபாய் 70 செலுத்தி விண்ணப்பிக்கும் படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 85 மற்றும் ஆன்லைன் பதிவு கட்டணமாக ரூபாய் 70 செலுத்தி மே 17ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :