மத்திய அரசின் சிறுபான்மையின கல்வி உதவித்தொகை பெற இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
By: vaithegi Tue, 08 Nov 2022 7:02:46 PM
சென்னை: சிறுபான்மையின கல்வி உதவித்தொகை பெற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் ...... தமிழகத்தில் மத்திய அரசால் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை படித்து வருபவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது.
இதனை அடுத்து இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த உதவித்தொகை பெற வருகிற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிதொகை பெற மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.