Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Thu, 21 July 2022 09:48:23 AM

குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, உதவி ஆணையாளர் (வணிகவரித்துறை), துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) உள்ளிட்ட 66 காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான குரூப்-1 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதை அடுத்து இந்நிலையில், துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ளது.

group 1,examination,tnpsc ,குரூப் 1,தேர்வு,டிஎன்பிஎஸ்சி

அதனால் அதன்படி, குரூப் 1 தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை எழுத்து தேர்வுக்கு http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

மேலும் குரூப்-1 பிரதான தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Tags :