Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Wed, 10 May 2023 11:03:52 AM

பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத்தேர்வு,வருகிற ஜூன் 19-ம் முதல் 26-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

எனவே இத்தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனை அடுத்து பள்ளி மாணவர்கள் நாளை முதல் மே 17-ம் தேதிக்குள் அவரவர் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

immediate supplementary examination,plus 2 class ,உடனடி துணைத்தேர்வு,பிளஸ் 2 வகுப்பு

தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதையடுத்து இதில் விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 18, 19, 20-ம் தேதிகளில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். அதற்கு தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 செலுத்த வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வுக்கால அட்டவணை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Tags :