Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்

By: vaithegi Sat, 09 Sept 2023 12:00:00 PM

போக்குவரத்து கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்


சென்னை: அக்டோபர் பத்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ....தமிழக அரசின் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சியானது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இதில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை பெற்று அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அவர்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இதையடுத்து அதன்படி 1973 தொழிற் பயிற்சி சட்டத்தின் கீழ் அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு மற்றும் தென் மண்டல தொழிற்பயிற்றுனர் பயிற்சி வாரியம் இணைந்து மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கிறது.

vocational training,transport corporation , தொழிற்பழகுநர் பயிற்சி,போக்குவரத்து கழகம்


இதற்காக 2019, 2020, 202,1 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் பிரிவில் மேற்படி கல்வி தகுதியை பெற்றவர்கள் பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். இவர்கள் அனைவரும் www.boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். எனவே மேற்படி கல்வித் தகுதியை கொண்ட மாணவர்கள் அரசின் தொழிற்பழகுநர் பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags :