- வீடு›
- செய்திகள்›
- ரூ. 51 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி நிர்வாகம்
ரூ. 51 கோடி கடன் பாக்கி வைத்துள்ளீர்கள் என டீக்கடைக்காரருக்கு அதிர்ச்சி தந்த வங்கி நிர்வாகம்
By: Karunakaran Thu, 23 July 2020 11:14:03 AM
அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். தற்போது கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், இவரது டீக்கடையை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் டீக்கடையை திறக்க அவர் ரூ. 50 ஆயிரம் கடன் கேட்டு வங்கி ஒன்றிற்கு மனு அளித்திருந்தார். அவரது பெயர் உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே வங்கியில் ரூ. 51 கோடி கடன் வாங்கியுள்ளீர்கள். மேலும் கடன் கேட்டால் எப்படி தரமுடியும்? என்று கூறியுள்ளனர்.
முதலில் ரூ. 51 கோடி கடன் பாக்கியை கட்டுங்கள் என வங்கி அதிகாரிகள் கூறியவுடன் ராஜ்குமார் அதிர்ச்சியடைந்தார். சாதாரண டீக்கடை வைத்துள்ள ராஜ்குமார் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
ரூ. 51 கோடி கடன் வாங்கியதாக வங்கி அதிகாரி கூறியதால், அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் சாதாரண டீக்கடை வைத்துள்ள நான் இதுவரை எந்த வங்கியிலும் கடன் வாங்கியது கிடையாது அப்படியிருக்க எப்படி ரூ. 51 கோடி வங்கி கடன் வாங்கினேன் என எனக்கே தெரியவில்லை என்று கூறினார்.