Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இரண்டு குழந்தைகளுடன் கொன்று சடலத்துடன் 15 நாட்கள் இருந்த இளம் தாய்

இரண்டு குழந்தைகளுடன் கொன்று சடலத்துடன் 15 நாட்கள் இருந்த இளம் தாய்

By: Nagaraj Fri, 02 Sept 2022 4:37:34 PM

இரண்டு குழந்தைகளுடன் கொன்று சடலத்துடன் 15 நாட்கள் இருந்த இளம் தாய்

பிரேசில்: பிரேசிலில் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து அழுகிய உடல்களை 15 நாட்களாக படுக்கையில் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் இளம் தாய் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் குராபுவா என்ற பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குறித்த தாயார் பிள்ளைகள் இருவரையும் கொலை செய்த 31 வயதான Eliara Paz Nardes, தினசரி வேலைக்கும் சென்றுள்ளதுடன் குடியிருப்பை சுத்தம் செய்வதிலும் தவறியதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமது சட்டத்தரணி நண்பர் ஒருவரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு உதவி கோரிய நிலையில், பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடியிருப்பை சோதனையிட்ட பொலிஸார் கடந்த மாதம் 27ம் திகதி சிறார்கள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளனர்.

investigation arrest,young mother,children,murder,prosecution ,
விசாரணை கைது, இளம் தாய், குழந்தைகள், கொலை, வழக்குப்பதிவு

சுமார் இரண்டு வார காலம் சிறார்களின் சடலங்கள் அவரது குடியிருப்பில் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் தமது பிள்ளைகளுக்கு உதவ தம்மால் முடியாமல் போனதன் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக அந்த தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தமது பிள்ளைகள் இருவரையும் ஒரே நாள் கொன்றதாக பொலிஸாரிடம் Eliara Paz Nardes கூறியுள்ளார். எனினும் பொலிஸாரால், முன்னெடுக்கப்பட்ட சோதனையில், ஒருவர் 13ம் திகதியும் இன்னொருவர் 17ம் திகதியும் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது கைதான Eliara Paz Nardes மீது மூன்று பிரதான பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Tags :
|