Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்! பொருளாதார சிக்கல் ..

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்! பொருளாதார சிக்கல் ..

By: Monisha Thu, 07 July 2022 9:26:38 PM

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்! பொருளாதார சிக்கல் ..

இலங்கை: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.இலங்கை தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.
இதன் விளைவாக உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.அத்துடன் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது.அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துமம் பொருளாதார சிக்கல் குறைந்தபாடில்லை.

sri lanka,young,economic,country ,இலங்கை,பொருளாதாரம்,இளைஞர்,நெருக்கடி,

இதனிடையே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் இலங்கையை விட்டு நாள்தோறும் வெளியேறி வருகின்றனர். முன்பு வேலை வாய்ப்புக்காக மட்டுமே குறிப்பிட்ட அளவிலான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகவும், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில ஏற்கெனவே உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தஞ்சம் கேட்கும் தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வெளியேறி வருகின்றனர்..

Tags :
|