Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க திரண்ட இளம் வாக்காளர்கள்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க திரண்ட இளம் வாக்காளர்கள்

By: Monisha Mon, 23 Nov 2020 09:38:25 AM

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க திரண்ட இளம் வாக்காளர்கள்

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 16-ந் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான பணிகள் அன்றே தொடங்கியது. மேலும் சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. கன்யாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,694 வாக்குச்சாவடிகளிலும் இந்த முகாம் நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஏராளமான இளம் வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து கொடுத்தனர்.

மேலும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வேறு தொகுதிக்கு பெயரை மாற்றம் செய்யவும், பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் செய்யவும் மனுக்கள் கொடுக்கப்பட்டன.

voter,name,correction,deletion,special camp ,வாக்காளர்,பெயர்,திருத்தம்,நீக்குதல்,சிறப்பு முகாம்

நேற்று முன்தினம் குமரி மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில் மொத்தம் 10 ஆயிரத்து 118 மனுக்கள் பெறப்பட்டன. நேற்று குமரியில் உள்ள 6 சட்டசபை தொகுகளிலும் நடைபெற்ற முகாம்களில் புதிதாக பெயர் சேர்க்க 15,534 பேர் விண்ணப்பித்தனர். இதே போல பெயர் நீக்கத்துக்கு(படிவம் 7) 1,720 பேரும், திருத்தம் செய்ய(படிவம் 8) 1,596 பேரும், ஒரே தொகுதியில் வேறு இடத்துக்கு மாறியவர்(படிவம் 8ஏ) 328 பேரும் மனு கொடுத்தனர். அந்த வகையில் மொத்தம் 19 ஆயிரத்து 178 மனுக்கள் பெறப்பட்டன.

கடந்த 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் மொத்தம் 29 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். மேலும் அடுத்த மாதம் 12 மற்றும் 13-ந்தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

Tags :
|
|