Advertisement

தீவிரவாத குற்றங்களுக்காக இளம் பெண் கைது

By: Nagaraj Thu, 27 Aug 2020 7:59:55 PM

தீவிரவாத குற்றங்களுக்காக இளம் பெண் கைது

இளம் பெண் கைது... ரொரன்றோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஹலீமா முஸ்தபா என்ற அந்த பெண் தீவிரவாத குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குழு ஒன்றில் இணைவதற்காக அவர் கனடாவிலிருந்து வெளியேறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

iker mao,charges,record,halima ,இக்கர் மாவோ, குற்றச்சாட்டுகள், பதிவு, ஹலிமா

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தன் கணவர் இக்கர் மாவோ உடன் துருக்கிக்கு ஹலீமா பயணித்த நிலையில், சிரியாவிலுள்ள தீவிரவாதக் குழுவில் அவர்கள் இணைவதற்காக செல்லலாம் என்ற அச்சத்தின் பேரில் துருக்கி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்கள்.

இக்கர் மாவோ மீது ஏற்கனவே இரண்டு தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீன் மறுக்கப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஹலிமா இன்று அல்லது நாளை கனடா நீதிமன்றம் ஒன்றில் ஆஜர் செய்யப்பட இருக்கிறார்.

Tags :
|