Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மணமேடையில் கைது...கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மணமேடையில் கைது...கிருஷ்ணகிரியில் பரபரப்பு

By: Monisha Sat, 29 Aug 2020 3:27:40 PM

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் மணமேடையில் கைது...கிருஷ்ணகிரியில் பரபரப்பு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் ஒருவர், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தனது தாய் மாமா வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அவரது வயிறு திடீரென பெரிதாக இருந்ததை அடுத்து சந்தேகம் அடைந்த அவரது உறவினர் மருத்துவரிடம் சென்று சோதனை செய்தனர். அப்போது சிறுமி 8 மாத கர்ப்பம் என்பது தெரியவந்தது

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது கடந்த 10 மாதங்களுக்கு முன் தன்னை 3 பேர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

rape,youth,arrest,police,investigation ,பாலியல் பலாத்காரம்,இளைஞர்,கைது,போலீசார்,விசாரணை

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரித்ததில் 55 வயது உதயணன் என்ற முன்னாள் கூட்டுறவு சங்க ஊழியர் மற்றும் ராம்ராஜ், சக்தி ஆகிய இரண்டு இளைஞர்கள் தான் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் என்பது தெரிய வந்தது

இந்த நிலையில் 55 வயது உதயணனை கைது செய்த போலீசார் மற்ற இரண்டு இளைஞர்களையும் தேடிவந்தனர். அப்போது ராமராஜன் என்பவருக்கு திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து திருமண மண்டபத்திற்கு சென்ற போலீசார் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மாப்பிள்ளை ராமராஜனை கைது செய்தனர். அதேபோல் அடுத்த சிலமணி நேரத்தில் சக்தியையும் போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞரை மணமேடையில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|
|