Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி... இந்திய அணி 289 ரன்கள் விளாசல்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி... இந்திய அணி 289 ரன்கள் விளாசல்

By: Nagaraj Mon, 22 Aug 2022 9:30:19 PM

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி... இந்திய அணி 289 ரன்கள் விளாசல்

ஹராரே: இந்திய அணி 289 ரன்கள் விளாசல்... ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் சதம் விளாச, இந்திய அணி 50 ஓவரில் 289 ரன்கள் குவித்தது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி ஹராரேயில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் லோகேஷ் ராகுல் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

indian team,zimbabwe,vlasal,5 wickets,subman gill,century ,இந்திய அணி, ஜிம்பாவே, விளாசல், 5 விக்கெட், சுப்மன் கில், சதம்

இந்திய அணிக்கு கேப்டன் ராகுல் (30), ஷிகர் தவான் (40) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. பொறுப்பாக ஆடிய இஷான் கிஷான் (50) அரைசதம் அடித்தார். தீபக் ஹூடா (1), சஞ்சு சாம்சன் (15), அக்சர் படேல் (1) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய சுப்மன் கில் சதம் விளாசினார். இவர், 130 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்தது. தீபக் சகார் (1), குல்தீப் யாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஜிம்பாப்வே சார்பில் பிராட் ஈவன்ஸ் 5 விக்கெட் சாய்த்தார்.

Tags :
|