- வீடு›
- விளையாட்டு›
- பாலியல் வழக்கில் கைதான குணதிலகா மீது அதிரடி நடவடிக்கை
பாலியல் வழக்கில் கைதான குணதிலகா மீது அதிரடி நடவடிக்கை
By: Nagaraj Tue, 08 Nov 2022 10:25:52 AM
கொழும்பு: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இனி தனுஷ்கா குணதிலகா போட்டியிட முடியாது. இப்படி ஒரு தடையை விதித்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். இனி கிரிக்கெட் போட்டி என்பதையே மறந்து விட வேண்டியதுதான் என்று ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான 29 வயது ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை,
பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிட்னி போலீசாரால் தனுஷ்கா குணதிலகா கைது
செய்யப்பட்டார்.
இதையடுத்து 31 வயதாகும்
குணதிலகாவிற்கு இலங்கை அணியில் இனி இடமில்லை என இலங்கை கிரிக்கெட் வாரியம்
தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை
பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது