Advertisement

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பாதுகாப்பாக நடத்த ஆலோசனை

By: Nagaraj Tue, 28 July 2020 10:17:18 AM

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை பாதுகாப்பாக நடத்த ஆலோசனை

ஐ.பி.எல். போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பல்வேறு துறையினருடன் ஆலோசனைகள் தொடங்கப்பட்டு விட்டன என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கவேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்க இருந்த டி20 உலககோப்பை தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடிவு செய்த பிசிசிஐ வரும் செப்டம்பர் 19-ந் தேதி முதல் நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

uae,defense,ipl,match,consulting ,ஐக்கிய அரபு அமீரகம், பாதுகாப்பு, ஐ.பி.எல்., போட்டி, ஆலோசனை

மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் முபாஷ்சிர் உஸ்மானி கூறுகையில், 'ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அதிகாரபூர்வ கடிதம் வந்து இருக்கிறது. இந்த போட்டியை பாதுகாப்பாக நடத்துவது குறித்து பல்வேறு துறையினருடன் ஆலோசனைகள் தொடங்கப்பட்டு விட்டன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|