Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அப்ரிடி விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு நலம்பெற வேண்டும்-கவுதம் கம்பீர்

அப்ரிடி விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு நலம்பெற வேண்டும்-கவுதம் கம்பீர்

By: Karunakaran Sun, 14 June 2020 11:50:08 AM

அப்ரிடி விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டு நலம்பெற வேண்டும்-கவுதம் கம்பீர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமையில் இருந்து ஏற்பட்ட உடல் வலி காரணமாக மருத்துவ பரிசோதனை செய்துகொண்டபோது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சாகித் அப்ரிடி பாகிஸ்தானில் பொது இடத்தில் காஷ்மீர் தொடர்பாகவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாராளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில், அப்ரிடி, இம்ரான், பாஜ்வா போன்ற ஜோக்கர்கள் பாகிஸ்தான் மக்களை முட்டாளாக்க இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் மீண்டும் மீண்டும் விஷத்தைப் பரப்பலாம். ஆனால் தீர்ப்பு நாள் வரை காஷ்மீரை பெறப்போவதில்லை என்று பதிவிட்டிருந்தார்.

gautam gambhir,coronation,shahid afridi,pakistan ,சாகித் அப்ரிடி,கவுதம் கம்பீர், இந்தியா,கொரோனாதொற்று

இந்நிலையில் சாகித் அப்ரிடிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அறிந்த கவுதம் கம்பீர், அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் அவர் விரைவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு நலம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சலாம் கிரிக்கெட் 2020 நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கவுதம் கம்பீர் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படக் கூடாது. பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நலம்பெற வேண்டும். அப்ரிடியுடன் தனக்கு அரசியல் ரீதியான கருத்து மாறுபாடு உண்டு என்றாலும், அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறினார்.


Tags :