Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் - ரோகித் சர்மா பாராட்டு

மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் - ரோகித் சர்மா பாராட்டு

By: Karunakaran Wed, 07 Oct 2020 5:21:33 PM

மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள் - ரோகித் சர்மா பாராட்டு

அபுதாபியில் நடந்த ஐ.பி.எல். போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தானை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி 4-வது வெற்றியை பெற்றது. இதில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. இதில் சூர்யகுமார் யாதவ் 47 பந்தில் 79 ரன்னும் , கேப்டன் , ஹர்திக் பாண்ட்யா 19 பந்தில் 30 ரன்னும் எடுத்தனர். ஸ்ரேயாஷ் கோபால் 2 விக்கெட்டும், ஆர்ச்சர், கார்த்திக் தியாகி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

அதன்பின் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 18.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 57 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் அதிகபட்சமாக 44 பந்தில் 70 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். மும்பை அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. மொத்தத்தில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

all players,mumbai team,talented,rohit sharma ,அனைத்து வீரர்களும், மும்பை அணி, திறமையானவர்கள், ரோஹித் சர்மா

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், மும்பை அணி வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களிடம் நிறைய தரம் இருக்கிறது. அதை சிறப்பாக செய்கிறோம். அனைவரும் நம்பிக்கை அளிக்கிறார்கள். மும்பை அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறமையானவர்கள். அவர்கள் அந்த நாளில் தங்களது திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

மேலும் தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் கூறுகையில், தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால், ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. கடந்த 3 போட்டிகளில் எங்களால் நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை என்று கூறினார். மும்பை அணி 7-வது ஆட்டத்தில் டெல்லியுடன் வருகிற 11-ந் தேதி மோதவுள்ளது. ராஜஸ்தான் அடுத்த ஆட்டத்தில் டெல்லியை 9-ந் தேதி சந்திக்கவுள்ளது.

Tags :