Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சிஎஸ்கேவில் உள்ள அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்

சிஎஸ்கேவில் உள்ள அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்

By: Karunakaran Wed, 23 Sept 2020 7:04:29 PM

சிஎஸ்கேவில் உள்ள அம்பதி ராயுடு இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார்

ஐபிஎல் 13-வது சீசன் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதின. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி மும்பையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் அம்பதி ராயுடு 48 பந்தில் 71 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. ஆனால் இந்த ஆட்டத்தில் அம்பதி ராயுடு இடம் பெறவில்லை. அவருக்கு ஏற்பட்ட சிறிய காயத்தால் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. தற்போது, மேலும் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ambati rayudu,csk,2 matches,rajastan royals ,அம்பதி ராயுடு, சி.எஸ்.கே., 2 போட்டி, ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள முரளி விஜய், ஷேன் வாட்சன் திணறி வரும் வரும் நிலையில் அம்பதி ராயுடு இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் வருகிற 25-ந்தேதி 3-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. அதன்பின், அக்டோபர் 2-ந்தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத அணியையும் எதிர்கொள்கிறது.

இந்த இரு ஆட்டத்திலும் அம்பதி ராயுடு விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளதால், சென்னை அணிக்கு அவர் இல்லாதது பெரும் இழப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே சென்னை அணியில் ரெய்னா ஆடவில்லை. இந்நிலையில் அம்பதி ராயுடுயும் விலகியுள்ளார்.

Tags :
|