Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அஸ்வின் தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் - ஸ்டீவன் சுமித்

அஸ்வின் தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் - ஸ்டீவன் சுமித்

By: Karunakaran Wed, 23 Dec 2020 11:07:26 AM

அஸ்வின் தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் - ஸ்டீவன் சுமித்

அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வெறும் 36 ரன்னில் சுருட்டி வீசிய ஆஸ்திரேலியா, மெல்போர்னில் வருகிற 26-ந்தேதி ‘பாக்சிங் டே’ என்ற பாரம்பரிய சிறப்புடன் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலியாவின் ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் 31 வயதான ஸ்டீவன் சுமித் முதலாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் அஸ்வின் சுழலில் சிக்கினார். 2-வது இன்னிங்சில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த பேட்டியில், அடிலெய்டு டெஸ்டில், அஸ்வின் வீசிய அந்த பந்து சுழன்று திரும்பவில்லை. அது பேட்டின் விளிம்பில் பட்டு கேட்ச்சாக மாறியது. துரதிர்ஷ்டவசமாக இது போன்று நடக்கத் தான் செய்யும். நான் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய இரு பந்துகளும் ஓரளவு சுழன்று திரும்பின. ஆனால் நேராக வந்து விக்கெட்டை பறித்த அந்த பந்தை நான் நினைத்த மாதிரி ஆடவில்லை. அஸ்வினின் பந்து வீச்சு நன்றாக இருந்தது. அவர் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். தற்போது உலகத்தரம் வாய்ந்த பவுலராக திகழ்கிறார் என்று கூறினார்.

aswin,world-class bowler,steven sumith,test match ,அஸ்வின், உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர், ஸ்டீவன் சுமித், டெஸ்ட் போட்டி

மேலும் அவர், தவறில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த டெஸ்டில் அவரது பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்வேன் என்று நம்புகிறேன். இந்திய கேப்டன்விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்டுகளில் விளையாடாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும். முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அவர் பேட்டிங் செய்து ரன் சேர்த்த விதம் அருமையாக இருந்தது. முதல் குழந்தை பிறப்புக்காக அவர் தாயகம் திரும்ப எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அதற்கு அவர் தகுதியானவர். அவரது வாழ்க்கையில் இது ஒரு மைல்கல் என தெரிவித்தார்.

அடிலெய்டு டெஸ்டில் எங்களது வேகப்பந்து வீச்சு நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்திய அணியினர் அந்த தோல்வியையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதைவிட்டு நகர்ந்து தொடர்ந்து நேர்மறை எண்ணத்துடன் இருக்க முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் தனித்துவமானவர்கள். தாங்கள் ஆட்டம் இழந்த விதம் குறித்து டெஸ்ட் போட்டி முடிந்ததும் எப்படி சிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களுடைய அடுத்த போட்டியின் செயல்பாடு அமையும். இன்னும் என்ன செய்திருக்கலாம் என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும் என சுமித் கூறினார்.

Tags :
|